தமிழ் சினிமாவில் கவர்ச்சி நாயகியாக வலம் வருபவர் தான் யாஷிகா ஆனந்த். தற்போது படவாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருக்கும் யாஷிகா தொடர்ந்து பல புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்து வருகிறார். மேலும் அதேபோல தற்போது ஒரு வித்தியாசமான கருப்பு நிற உடையில் போட்டோஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.
யாஷிகா ஆனந்த்
தமிழில் வெளியான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின் அவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இவரின் அடுத்த படம் எப்பொழுது என்று ஏங்கி கொண்டிருந்தவர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அந்த வீட்டில் யாஷிகாவும், ஐஸ்வர்யாவும் செய்த செயலில் மக்கள் பலரும் கடுப்பானார்கள். ஆரம்பத்தில் அமைதியாக இருந்த யாஷிகா நாளடைவில் தனது மொத்த சுயரூபத்தையும் காட்ட ஆரம்பித்தார். மேலும் மகத் மற்றும் யாஷிகா இடையே காதலும் மலர்ந்தது. இது பல சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
ஏற்கனவே மகத் வெளியே ஒருவரை காதலித்து வந்த நிலையில் உள்ளே யாஷிகாவை காதலித்தது பலரையும் முகம் சுளிக்க வைத்தது. ஆனால் யாஷிகா பிக் பாஸ் கொடுத்த டாஸ்கை சிறப்பாக செய்து முடித்தார் என்றே சொல்லலாம். மேலும் டைட்டில் வின்னருக்காக கொடுக்கப்பட்ட 50 லட்சம் ரொக்கத்தில் இருந்து 5 லட்சம் அவருக்கு பரிசாகவும் கிடைத்தது.
இந்நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த யாஷிகா ‘ஜாம்பி’ என்ற படத்தில் நடித்தார். ஆனால் அந்த படமும் அவருக்கு கைகொடுக்கவில்லை. மேலும் சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியலில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்.
லாக்டவுன் சமயத்தில் இருந்து தொடர்ந்து பல போட்டோஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். இது வைரலும் ஆனது. தற்போது ஒரு கருப்பு நிறத்தில் வித்தியாசமான உடையணிந்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். பலரும் அதனை கிண்டல் செய்தும் வருகின்றனர்.