திருமணத்திற்கு முந்தைய போட்டோஷூட்டால் விபரீதம் – இளம் ஜோடி ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு!!

0

திருமணத்திற்கு இரு வாரங்களே இருந்த இளம்ஜோடி, திருமணத்திற்கு முந்தைய போட்டோஷூட்க்காக மைசூர் அருகே காவேரி ஆற்றை பரிசல் மூலம் கடக்க முயன்றபோது பரிதாபமாக உயிரிழந்தனர். இது உறவினர் மற்றும் ஊர் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

போட்டோ ஷூட்டால் உயிரிழப்பு

கர்நாடக மாநிலம் , மைசூரில் உள்ள கியாத்மாரனஹளி சேர்ந்த 28 வயதான சந்ருக்கும், 20 வயதான சசிகலாவுக்கும் வரும் நவ.22 ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. அந்நிலையில் தற்போது ட்ரெண்டாக பரவி வரும் போட்டோ ஷூட்டின் ஆசையால் இந்த இளம்ஜோடி பரிதாபமாக உயிரிழந்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அவர்கள் பரிசலில் போட்டோ ஷூட் எடுக்க முயன்றபோது பரிசல் கவிழ்ந்து உயிரிழந்தாக தெரிய வருகிறது.

சுற்றுலா தலம் “தலக்காடு”

மைசூரில், புகழ்பெற்ற தலக்காடு என்ற சுற்றுலா தலத்திற்கு பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் இந்த இளம்ஜோடி சென்றுள்ளனர். காவேரி ஆற்றை பரிசல் மூலம் கடக்கலாம் என்ற முடிவை எடுத்து இளம்ஜோடி ஒரு பரிசலிலும் , உறவினர்கள் மற்றொரு பரிசலில் வந்தனர். அப்போது போட்டோ ஷூட் எடுக்கும்போது எதிர்பாராத விதமாக பரிசல் கவிழ்ந்தது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

அவர்களை காப்பாற்ற முடியவில்லை, கரையைக் கடக்க 15 மீட்டர் தூரமே இருந்தது என்று உறவினர்கள் கவலையுடன் தெரிவித்தனர். பரிசலோட்டி நீந்தி கரையை கடந்து விட்டார். இந்த செய்தி அந்த பகுதியில் வருத்தத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here