தமிழில் வெளியான ‘இருட்டு அறையில் முரட்டு கூத்து’ படத்தின் மூலம் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். தற்போது படவாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து தனது இடத்தை தக்கவைக்க போராடி வருகிறார். தொடர்ந்து பல போட்டோஷூட் நடத்தி வரும் யாஷிகா தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
யாஷிகா ஆனந்த்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். அதில் கலந்துகொள்வதற்க்கு முன்பே அவர் ‘இருட்டு அறையில் முரட்டு கூத்து’ என்ற படத்தில் நடித்துள்ளார். அப்பொழுது அவருக்கு 18 வயது தானாம்.
இந்த வயதில் யாரும் நடிக்க தயங்கும் கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார் என்றே சொல்லலாம். ஆனால் இதை பற்றி பேசும்போது என்னை பற்றி என் குடும்பத்திற்கும், எனது நண்பர்களுக்கும் நன்றாக தெரியும் என்று கூறியுள்ளார் யாஷிகா.
மேலும் அவர் பிக் பாஸ் வீட்டில் கலந்துகொண்டதற்கு பிறகு தான் அனைவர்க்கும் தெரியுமாம் இவருக்கு 18 வயது தான் என்று. அவருக்கு 18 வயது தான் என்றாலும் அவரின் பக்குவமும் அறிவும் அதற்கு அப்பாற்பட்டே இருந்தது. அதனை பிக் பாஸ் வீட்டிலேயே பார்க்க முடிந்தது.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
பிக் பாஸ் வீட்டில் இவரது உடை மற்றும் இவரின் சில நடத்தைகள் பலவும் சர்ச்சைகளை கிளப்பியது. கமல் எவ்வளவு சொல்லியும் அவர் மாறுவதாகவும் இல்லை. ஆனாலும் ஐஸ்வர்யா மற்றும் யாஷிகாவின் நட்பை பலரும் ஆதரித்தும் வந்தனர்.
இதற்கிடையில் ஐஸ்வர்யாவை யாஷிகா பயன்படுத்திக்கொள்வதாகவும் பேச்சுக்கள் எழுந்தன. ஆனால் யாஷிகா தனது விளையாட்டை திறம்பட விளையாண்டு பரிசு தொகையையும் பெற்று வீட்டை விட்டு வெளியேறினார். மேலும் அதன் பிறகு அவர் ஜாம்பி என்ற படத்தில் நடித்திருந்தார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
ஆனால் அந்த படமும் அவருக்கு ஹிட் கொடுக்கவில்லை என்றே சொல்லலாம். இப்பொழுது சின்னத்திரையில் ஒரு பிரபல சீரியலில் முக்கியமான ரோலில் நடித்திருந்தார். அதன் பின் படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடுவது என தனது இடத்தை தக்க வைக்க பல முயற்சிகளை செய்து வருகிறார்.
அந்த வகையில் போட்டோஷூட் நடத்தி பல புகைப்படங்களை வெளியிட்டும் வந்தார். அதே போல தற்போதும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.