துருக்கியை தொடர்ந்து, அடுத்த ஆண்டு உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரை இந்தியா நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்:
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர் கடந்த 1ம் தேதி முதல் ஜோர்டானின் அம்மானில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய வீரர்களான நரேந்தர் மற்றும் சுமித் அரையிறுதி வரை முன்னேறி உள்ளனர். இந்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் பெண்களுக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் குறித்த அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.
தோனியை பின்னுக்கு தள்ளிய ரோஹித் சர்மா…, தொடரும் சாதனை பட்டியல்!!
அதாவது, நடப்பு ஆண்டு பெண்களுக்கான உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் தொடரானது துருக்கியில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து, அடுத்த ஆண்டு இந்த சாம்பியன்ஷிப்பை இந்திய நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பு பொதுச் செயலாளர், ஹேமந்த கலிதா அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதற்கு முன், இந்தியா பெண்களுக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பை 2006 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் வெற்றிகரமாக நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. நடப்பு ஆண்டு துருக்கில் நடைபெற்ற சாம்பியன்ஷிப்பில் இந்திய வீராங்கனைகள் ஒரு தங்கம் உட்பட மூன்று பதக்கங்களை கைப்பற்றி இருந்தனர். அடுத்த (2023) சாம்பியன்ஷிப் இந்தியாவில் நடைபெற இருப்பதால் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.