மாநிலம் முழுவதும் உள்ள குறிப்பிட்ட இந்த மக்களுக்கு மட்டும், ரூபாய் 3000 ஓய்வூதியம் வழங்க உள்ளதாக தெலுங்கானா அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அரசு அறிவிப்பு :
மாநில அரசு, பொது மக்களுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. சமீபத்திய தீபாவளி பண்டிகையின் போது ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச பரிசு பொருட்கள், உதவித்தொகை என பல்வேறு நலத்திட்ட அறிவிப்புகளை வழங்கியது. இதேபோல் மத்திய அரசு, பொது மக்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டது.
இனி திருச்செந்தூர் கோவிலில் செல்போன், ஜீன்ஸ், லெக்கின்ஸுக்கு தடை.., உயர்நீதிமன்றம் உத்தரவு!!
அந்த வகையில், தெலுங்கானா அரசு அந்த மாநில மக்களுக்கான சிறப்பு நலத்திட்ட அறிவிப்பு குறித்த சூப்பர் அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அதாவது, தெலுங்கானாவில் ( ஹைதராபாத்) உள்ள மாற்றுத்திறனாளிகளின் அன்றாட வாழ்க்கைக்கு உதவும் வகையில், அவர்களுக்கு ரூபாய் 3000 மதிப்புள்ள ஓய்வூதியம் வழங்க முடிவு எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்படும், பொருளாதார சிக்கல்களை சரி கட்ட இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெலுங்கானா அரசு விளக்கம் அளித்துள்ளது. தற்போது பலரும் அரசின் இந்த அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.