உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்ததால் தமிழகம் ஐந்தாவது முறையாக இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது, என்று முதல்வர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
உடல் உறுப்பு தான தினம்:
ஆண்டுதோறும், ஆகஸ்ட் 13 ஆம் தேதி சர்வேதேச உடல் உறுப்பு தான தினம் அனுசரிக்கபடுகிறது. உடல் உறுப்புகளை மற்றவர்களுக்கு தானம் செய்ய வேண்டும் என்றும், அப்படி தானம் செய்பபவர்களை ஊக்குவிக்கும் விதமாக இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனை அடுத்து தமிழக முதல்வர் பழனிசாமி மக்களுக்கு வாழ்த்து செய்தி வழங்கி உள்ளார்.
முதல்வர் கூறியுள்ளதாவது:
அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளை தலைவருக்கு கொரோனா தொற்று!!
இந்தியாவிலேயே முதல் முதலாக தமிழகத்தில் தான் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணையம் என்ற ஒன்று உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பை அம்மா அவர்கள் தான் முதல் முதலாக உருவாக்கினார். இதன் மூலமாக தமிழகம் தான் உடல் உறுப்பு தானத்தில் முன்னோடியாக அனைத்து மாநிலங்களுக்கும் திகழ்கிறது.
ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்
தற்போது வரை, 1,382 கொடையாளர்களிடம் இருந்து உடல் உறுப்புக்கள் பெறப்பட்டுள்ளன. இந்த வருடமும், இந்தியாவில் தமிழகம் தான் உடல் உறுப்பு தானத்தில் முதலிடத்தில் உள்ளது. மக்கள் அனைவரும் உடல் உறுப்பு தானம் செய்ய முன்வர வேண்டும். நீங்கள் மற்றவர்களுக்கு முன்னோடியாக இருக்க வேண்டும். என்று முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.