அவசர நிலையினால் வீட்டிலிருந்து பணிபுரியும் ஊழியர்களுக்கு, அடிப்படை வசதி ஏற்படுத்தி கொள்ள கூடுதல் சம்பளம் வழங்க கேட்டுக்கொள்ளப் படுவது நிறுவனங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது.
கூடுதல் சம்பளம்
நாடு முழுவதும் பரவியுள்ள கொரோனா தொற்று பாதிப்பால், அனைத்து நிறுவனங்களும், தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்யுங்கள் என்று கூறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
வீட்டிலிருந்து வேலை செய்யும் ஊழியர்களுக்கு அடிப்படை வசதிகளை அமைத்து கொள்ள, பணியாளர்கள் கூடுதல் சம்பளத்தை அளிக்க உள்ளதாக தெரிவிக்கப் படுகின்றன.
அடிப்படை வசதி ஏற்படுத்தி கொடுத்தல்
ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்வதால், பொதுவாக வரும் செலவுகளாகிய நிறுவனத்தின் வாடகை, மின்சாரக் கட்டணம் போன்றவை நிறுவனத்திற்கு இல்லை. மேலும், இந்தியாவில் மட்டும் 4.3% நிறுவன வருவாய் வாடகைகளுக்கும் மற்றும் இதர செலவுகளுக்கும் செல்கிறது என்று ஆய்வு தெரிவிக்கிறது.
மேலும் பார்க்க ⇛⇛⇛ கோஸ்வாமி துளசிதாஸின்-‘துளசிதாஸ் ஜெயந்தி’
எனவே, அதனை ஊழியர்களுக்கு அளித்து வேலை புரிவதற்கான வசதியை ஏற்படுத்திக் கொள்ள நிறுவனம் உதவலாம் என்று அறிவுறுத்தப் படுகிறது. 50% ஊழியர்கள் கொண்டு நிறுவனம் இயங்கினால், அவர்கள் தாராளமாக கூடுதல் சம்பளம் அளிக்கலாம் என்று கூறப்படுகிறது.
கருத்து வேறுபாடுகள்
ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்வதனால், அவர்கள் சுவாத்தியமாக உள்ளார்கள் என்றும், எனவே அவர்களுக்கு கூடுதல் சம்பளம் கொடுக்க தேவையில்லை என்றும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.
ஆனால், வீட்டிலிருந்து வேலை செய்பவர்களுக்கு இணைய வசதி இல்லாமை போன்ற பல்வேறு இன்னல்களும் உள்ளன என்று மருதரப்பினர் கூறுகின்றனர். மேலும், கூடுதல் சம்பளம் அளிப்பதை தவிர்க்க, பல நிறுவனங்கள் நிறுவனம் வந்து பணிபுரிய அழைப்பதாகவும் கூறப்படுகிறது.