தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் தொடர்ந்து இயங்கும் – உச்சநீதிமன்றம் தீர்ப்பு!!

0
TASMAC
TASMAC

தமிழகத்தில் ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க தடை விதித்த உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் ரிட் வழக்குகளை தொடர்ந்து விசாரிக்க உயர்நீதிமன்றத்திற்கு அனுமதி வழங்கி உள்ளது.

டாஸ்மாக் கடைகள்:

தமிழகத்தில் ஊரடங்கின் ஆரம்ப காலத்தில் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தாலும் பின்பு சில விதிமுறைகளுடன் திறக்கப்பட்டது. ஆனால் முன்பு மதியம் 12 மணிக்கு திறக்கப்பட்டு வந்த டாஸ்மாக் கடைகள் ஊரடங்கு காலத்தில் காலை 10 மணிக்கே திறக்கப்படுகிறது. இதனால் அரசுக்கு வருமானம் அதிகரித்தது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள் டாஸ்மாக் கடைகளை திறக்க தடை விதித்தனர்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

எனவே இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதன் முந்தைய விசாரணையில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க தடை விதித்த உயர்நீதிமன்ற உத்தரவிற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இதனால் கடைகள் திறக்கப்பட்டு மது விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

ஏற்கனவே இந்த வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பு விதிக்கப்பட்டு இருந்த இடைக்கால தடை தொடரும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்து உள்ளனர். இருப்பினும் இது தொடர்பான ரிட் வழக்குகளை தொடர்ந்து விசாரிக்கலாம் என உயர்நீதிமன்றத்திற்கு அனுமதி வழங்கி உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here