தமிழகத்தில் தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகள் அனைவருக்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் ரூ.1000 உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் இப்போது லோக் சபா தேர்தல் வரவுள்ளது. எனவே இந்த தேர்தலுக்குப் பின் மகளிர் உரிமை தொகை திட்டம் விரிவுபடுத்தப்படும் என திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தின் போது எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியிடம் அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகும் மகளிர் உரிமை தொகை திட்டம் தொடருமா? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அதிமுக ஆட்சிக்கு வந்தாலும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் மாதந்தோறும் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படும் என உறுதி அளித்துள்ளார்.