பொதுவாக அரசு துறைகளில் பணிபுரிபவர்கள் உயிரிழக்க நேரிட்டால், அவரின் ஓய்வூதியம் மனைவிக்கு கிடைக்கும். அப்படி அவரது மனைவியும் உயிரிழக்கும் பட்சத்தில், அவர்களின் குழந்தைகளுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் அரசு ஊழியர் மீது விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது உயிரிழக்கும் பட்சத்தில், வழக்கத்தில் உள்ள சட்ட செயல்பாடுகள் சிக்கலாக உள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து ஓய்வூதிய விதிகள் திருத்தப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி அரசு பெண் ஊழியராக இருப்பவர் விவாகரத்து அல்லது குடும்ப வன்முறை கீழ் கணவர் மீது வழக்கு நிலுவையில் உள்ள போது மரணம் அடையும் பட்சத்தில், அவரது குழந்தைகள் குடும்ப ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளனர்.