Sunday, April 28, 2024

பெண் தற்கொலை செய்துகொண்டதை வீடியோவாக எடுத்தவர் கைது – போலீசார் அதிரடி!!

Must Read

கொடைக்கானலில் பெண் ஒருவர் தனது கணவர் வீட்டின் முன் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டதை வீடியோவாக எடுத்தவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெண் தற்கொலை:

கொடைக்கானல் கீழ்மலை கேசிபட்டியை சேர்ந்தவர் சதிஷ். இவரும் மாலதி என்பவரும் பல வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் சம்மதம் கிடைக்காததால் இவர்கள் இருவரும் அவரவர் பெற்றோர் சம்மதம் இன்றி தாங்களாகவே திருமணம் செய்துகொண்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றது.

இவர்களுக்கு தற்போது மூன்று வயதில் ஆண்குழந்தை உள்ளது. இப்படி இருக்க சதிஷ் வீட்டில் இவருக்கு பெண் பார்த்து திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். இதனை அறிந்த மாலதி நியாயம் கேட்பதற்காக அவரது கணவர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

மனம் உடைந்த மாலதி:

அவர் தனது குழந்தையையும் அழைத்து சென்றுள்ளார். அங்கு தனது கணவர் வீட்டினரிடம் சென்று பேசிய போது அவர்கள் இவரை தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளனர், மேலும் அவரை உடல் ரீதியாகவும் காயப்படுத்தி உள்ளனர். அவரது கணவரும் இதனை எதிர்த்து கேட்காததால் மனம் உடைந்து போன மாலதி அருகில் உள்ள டீ கடைக்கு தனது மகனை அழைத்து சென்று பெட்ரோல் மற்றும் தீப்பெட்டி வாங்கியுள்ளார்.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

suicide
suicide

அவரது மகனை அந்த டீ கடையில் அமர வைத்து விட்டு தனது கணவர் வீட்டின் முன் பெட்ரோலை தன் மீது ஊற்றி தற்கொலை செய்துள்ளார். யாரும் தடுக்க எந்த முயற்சிகளும் எடுக்கவில்லை அவரை காப்பாற்ற விழையவுமில்லை, இதனால் சம்பவ இடத்திலேயே மாலதி மரணமடைந்துள்ளார்.

வைரலாக வீடியோ:

மாலதியின் கணவர் வீட்டார் தான் காப்பாற்ற விழையவில்லை என்றால் அருகில் இருந்த மக்கள் காப்பாற்ற நினைத்திருந்தால் காப்பாற்றி இருக்கலாம். மக்கள் மனதில் சிறிதளவு கூட மனிதாபிமானம் இல்லை என்று இந்த சம்பவம் எடுத்து காத்திருக்கிறது.

மாஸ்க் & சமூக இடைவெளி இந்தியாவில் 2 லட்சம் மரணங்களை தடுக்கும்!

இந்த சம்பவத்தை சரவணகுமார் என்பவர் வீடியோவாக எடுத்து சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ அவ்வளவு தெளிவாக இருந்துள்ளது, காரணம் கேமரா சிறிது கூட அசையவில்லை. இந்த வீடியோவை பார்த்த பலரும் வீடியோ எடுத்தவராவது காப்பாற்றி இருக்கலாம் என்று கொந்தளித்தனர் மேலும் வீடியோ எடுத்தவரை கைது செய்ய வேண்டும் என்றும் கூறினர்.

இதனை அடுத்து போலீசார் மாலதியின் கணவர் சதிஷ் மற்றும் வீடியோ எடுத்த சரவணகுமார் ஆகியோரை கைது செய்துள்ளனர். அவர்களை விசாரணைக்கும் உட்படுத்தி உள்ளனர். விசாரணையில் சரவணகுமார் மாலதியின் கணவர் சதீஷின் அண்ணன் என்பது தெரியவந்துள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

2024 மே மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு., எவ்ளோ நாட்கள் தெரியுமா? முழு விவரம் உள்ளே!!!

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கி நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் நலன் கருதி பல்வேறு டிஜிட்டல் வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றனர். ஆனாலும் இன்னும் ஒரு சில...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -