சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனியுடன் மோதலா?? சுரேஷ் ரெய்னா விளக்கம்!!

0

ஐபிஎல் 2020 போட்டிகளில் இருந்து விலகி நாடு திரும்பி உள்ள சுரேஷ் ரெய்னா தனக்கும், கேப்டன் எம்எஸ் தோனிக்கும் எவ்வித மோதலும் இல்லை என தெரிவித்து உள்ளார். அவர் போட்டிகளில் இருந்து விலகியதற்கு இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தான் காரணம் என கூறப்பட்டு வந்த நிலையில் ரெய்னா விளக்கம் அளித்து உள்ளார்.

ரெய்னா & தோனி:

இந்திய அணி முதல் ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வரை சிறந்த நண்பர்களாக விளங்குபவர்கள் ரெய்னாவும், தோனியும். சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்த சில நிமிடங்களிலேயே தானும் ஓய்வு பெறுவதாக ரெய்னா அறிவித்தார். இதுவே இருவருக்கும் இடையிலான நட்பினை எடுத்துக் காட்டும். இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க ஐக்கிய அரபு அமீரகம் சென்று இருந்த சுரேஷ் ரெய்னா தீடிரென இந்தியா திரும்பினார்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

இதற்கு கேப்டன் தோனியுடன் ஏற்பட்ட மோதல் மற்றும் ஹோட்டல் அறை வசதி பிரச்சனைகள் தான் காரணம் என வதந்திகள் பரவின. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் ரெய்னா நேற்று உண்மையான காரணத்தை பதிவிட்டு இருந்தார். பஞ்சாப்பில் வசித்து வரும் எனது மாமா மர்ம நபர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்து விட்டார். தனது குடும்பத்திற்கு நடந்த கொடூர சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகள் கணடறியப்பட வேண்டும் என ரெய்னா ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.

‘அரியரை வென்ற அரசனே’ – எடப்பாடிக்கு போஸ்டர் அடித்த கல்லூரி மாணவர்கள்!!

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனியுடன் எவ்வித மோதலும் இல்லை என ரெய்னா இன்று தெரிவித்து உள்ளார். அணியின் உரிமையாளர் சீனிவாசன் கூறியதை தந்தை திட்டியதை போல் உணர்கிறேன். சென்னை அணிக்காக இன்னும் 4 – 5 ஆண்டுகள் விளையாட விரும்புகிறேன். தனிமையில் இருந்தாலும் தொடர்ந்து பயிற்சியில் இருக்கிறேன். விரைவில் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பேன் என ரெய்னா கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here