தமிழகத்தில் ரத்தாகும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள்..? பள்ளிக்கல்வித்துறை தீவிர ஆலோசனை..!

0

கொரோனா நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதனால் சமூக விலகலை அனைவரும் கடைபிடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளில் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டது. 1 முதல் 9 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. தற்போது 10 ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய்வது குறித்து பள்ளி கல்வித்துறையிடம் கருத்து கேட்கப்பட்டு உள்ளது.

பொதுத்தேர்வு ரத்தாகுமா ??

2019 ஆம் ஆண்டிற்கான 10 வகுப்பிற்க்கான பொதுத்தேர்வு மார்ச் மாதத்தில் தொடங்கி ஏப்ரல் மாதத்தில் நடத்த தமிழக கல்வித்துறை திட்டமிட்டிருந்தது, அதன்படி கடந்த மார்ச் முதல் வாரத்தில் தொடங்கிய பொது தேர்வு நடந்து கொண்டிருந்த வேளையில் கொரோனா காரணமாக நிறுத்திவைப்பதாக தெரிவித்திருந்தது.

மார்ச் 27-ம் தேதி நடக்கவிருந்த 10-ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 15ம் அன்று நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தமிழகத்தில் தொடர்ந்து அசாதாரணமான சூழல் நிலவி வருவதால் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம் தமிழக அரசு கருத்து கேட்டு உள்ளது.

தீவிர ஆலோசனை..!

ஏற்கனவே ஒன்று முதல் 9-ம் வகுப்பு முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பாஸ் போட உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அடுத்த ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை மற்றும் பாடத்திட்டம் தயாரிக்கும் பணி இருப்பதால் 10-ம் வகுப்பு பொது தேர்வை ரத்து செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here