அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 11 மணிக்கு வீடியோ கான்பிரன்ஸிங்கில் ஆலோசனை நடத்துகிறார்.
ஊரடங்கு உத்தரவு..!
கொரோனாவின் பாதிப்பு அதிகரித்ததை அடுத்து கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சமூக பரவலைத் தடுக்க இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக பிரதமர் தெரிவித்திருந்தார். கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தமைக்கு என்னை மன்னித்துவிடுங்கள். நீங்கள் வீட்டில் இருந்தால்தான் கொரோனா உங்கள் வீட்டில் வராது என தெரிவித்தார்.
இன்று ஆலோசனை..!
டெல்லியில் நிஜாமுதீன் மாநாட்டில் கலந்து கொண்டவர்களையும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் தேடி கண்டுபிடிப்பது குறித்தும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மூலம் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து இன்று காலை 11 மணிக்கு அனைத்து மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை செய்யவுள்ளார்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |