இன்றைய காலகட்டத்தில் பாலியல் கொடுமை செய்யும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.அதாவது தேனி மாவட்டம் போடி ஜீவா நகரில் ரமேஷ் – கிருஷ்ணவேணி தம்பதி தனது இரண்டு குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர். ஆனால் ரமேஷ்க்கு அதிகம் குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று ரமேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரின் உடலை காவல்துறை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போது சில உண்மைகள் தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து மனைவியை காவல்துறை விசாரித்த போது, இது ஒரு கொலை என தெரிய வந்தது. அதாவது தன்னை இரவு நேரத்தில் அதிகமாக பாலியல் ரீதியாக துன்புறுத்தியதால் அவரின் அந்தரங்க உறுப்பை எட்டி உதைத்தேன். இதையடுத்து கழுத்தை நெரித்து கொலை செய்தேன் என்று மனைவி ஒப்பு கொண்டார். இதனை தொடர்ந்து மனைவியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.