தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்களின் நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது.அந்த வகையில் ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களை நியமனம் செய்து வருகின்றனர். அதன்படி கடந்த 01.08.2023ஆம் தேதி வரை பள்ளிகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு உபரியாக உள்ள முதுநிலை ஆசிரியர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
இவர்களை ஆசிரியர் காலிப் பணியிடம் உள்ள பள்ளிகளுக்கு கலந்தாய்வு மூலம் பணி நிரவல் செய்யப்படுகின்றனர். இந்த கலந்தாய்வு வருகிற நவம்பர் 20ஆம் தேதி நடைபெற உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. எனவே மாவட்டந்தோறும் கலந்தாய்வு நடைபெற உள்ள பகுதிகளில் கணினி, மின்சாரம் உள்ளிட்ட தகுந்த முன்னேற்பாடுகளை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் செய்திருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.