தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி ஹீரோக்களில் ஒருவராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். படங்களில் தனது அசத்தலான நடிப்பு திறனை வெளிப்படுத்தி வந்த இவர் அண்மையில் அரசியல் பயணத்தை தொடங்கியிருந்தார். மேலும் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் 10 ஆம் வகுப்பு மற்றும் + 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கல்வி உதவியை வழங்கியிருந்தார்
இதையடுத்து தமிழக மாணவர்களுக்கு இரவு நேர பாடக சாலையை அமைக்க உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இப்படி இருக்கையில் தற்போது மற்றொரு முக்கிய அறிவிப்பு ஒன்றை விஜய் மக்கள் இயக்கம் வெளியிட்டுள்ளது. அதாவது மாணவ மாணவிகளின் பொது அறிவுத் திறனை வளர்க்கும் வகையில் தமிழகம் முழுவதும் நூலகங்களை திறக்க திட்டமிடப்பட்டுள்ளனர். அந்த வகையில் நாளை முதல் கட்டமாக 11 இடங்களில் நூலகங்களை திறக்க உள்ளதாக விஜய் மக்கள் இயக்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.