இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் தற்போதைய பெரும் எதிர்பார்ப்பாக இருப்பது இந்திய அணி உலக கோப்பையை வெல்லும் என்பதே. வரும் நவம்பர் 19 ஆம் தேதி இந்த உலக கோப்பையை வெல்வதற்கான இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து இந்திய அணி விளையாட உள்ளது. இந்த போட்டியை சுவரசியாமாக்கும் விதமாக, போட்டி தொடங்கும் முன் ரசிகர்களை கவரும் வகையில் விமான சாகசங்களை நிகழ்ந்த இந்திய விமானப்படை திட்டமிட்டுள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
இதனை தொடர்ந்து, ஐசிசியானது தற்போது இறுதிப் போட்டி குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, இதற்கு முன் உலகக் கோப்பை வென்ற அனைத்து கேப்டன்களையும் ஐசிசியானது இறுதிப் போட்டியை காண நரேந்திர மோடி மைதானத்திற்கு அழைத்துள்ளது. இதையடுத்து, 1983 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் உலக கோப்பையை வென்று இந்தியாவை உலக அறிய பெருமையை அடைய செய்த கபில் தேவ் மற்றும் தோனி உள்ளிட்டோரும் இறுதிப் போட்டியை நேரில் காண வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து காயங்களால் அவதிப்படும் ஹர்திக் பாண்டியா…, இந்திய அணியில் இடம் பிடிபத்தில் சிக்கல்??