கேரளாவில் பிரசித்திபெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் மண்டல மகர விளக்கு பூஜை வெகுவிமரிசையாக நடைபெறும். இதற்காக இரண்டு மாதங்கள் கோவில் நடை திறந்திருப்பதால், அனுதினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து வந்து ஐயனை தரிசனம் செய்ய வருவார்கள். அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான மண்டல மகர விளக்கு பூஜைக்காக நேற்று (நவ.16) மாலை கோவில் நடை திறக்கப்பட்டது.
தமிழக மக்களுக்கு குட் நியூஸ்., மற்றொரு சூப்பர் திட்டம் அறிமுகம்., விஜய் மக்கள் இயக்கம் அறிவிப்பு!!
இதையடுத்து இதுவரை விரதமிருந்த ஐயப்ப பக்தர்கள் பல்லாயிரக்கணக்கானோர் இன்று (நவம்பர் 17) ஐயனை தரிசனம் செய்ய சபரிமலையில் குவிந்து உள்ளனர். அதேபோல் கார்த்திகை 1ஆம் நாளான இன்று அனைத்து ஐயப்பன் கோவிலிலுய் பக்தர்கள் விரதமிருந்து சபரிமலைக்கு செல்ல மாலை அணிந்து வருவது குறிப்பிடத்தக்கது.