‘ஏம்பா நாங்க உங்களுக்கு என்னப்பா பாவம் பண்ணோம்’ – பேஸ்புக், வாட்ஸ் ஆப் தடை குறித்து இணையத்தை தெறிக்க விடும் மீம்ஸ்!!

0

மத்திய அரசு அறிவித்த புதிய விதிமுறைகளை பின்பற்றாத நிலையில் வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் வாட்ஸ் ஆப் போன்ற தளங்கள் இயங்க தடை விதிக்கப்படலாம் என்று தகவல் வெளிவந்துள்ளது.

மீம்ஸ்:

மத்திய அரசு விதித்துள்ள புதிய விதிமுறைகளை பின்பற்றாத காரணத்தினால் இன்னும் சில தினங்களில் வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக், ட்விட்டர் போன்ற செயலிகள் இயங்காது என்று தகவல் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் இருப்பதால் பயனாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.

தற்போது இதுகுறித்து இணையத்தில் பல மீம்ஸ்கள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. அதில் பயனாளர்கள் நாங்க என்னப்பா பாவம் பண்ணோம் கொஞ்சம் கருணை காட்ட கூடாதா என்று அரசிடம் கேட்பது போல் உள்ள மீம் அனைவரையும் கவர்ந்துள்ளது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

அதேபோல் இந்த ஊரடங்கு காலத்தில் இது இல்லேன்னா நாங்க எப்படி? என்று பயனாளர்கள் கதறி வருகின்றனர். ஆனால் இந்த தகவலினால் சிலர் மட்டும் குஷி அடைகின்றனர். அது வேறு யாருமில்லை பெற்றோர்கள் தான்.

பிள்ளைகள் முழு நேரமும் இணையத்தில் மூழ்கி வருவதன் எதிரொலியாக தற்போது இந்த முடக்கம் பெற்றோர்களுக்கு அதிக மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

ஷிவாங்கி பிறந்தநாளுக்கு அஸ்வின் என்ன பண்ணி இருக்காருன்னு பாருங்களே – வைரலாகும் புகைப்படம்!!

மேலும் விரைவில் இதுகுறித்து உரிய நிறுவனம் அரசிக்கு பதிலளிக்க வேண்டும் என்றும் இல்லையெனில் அரசு சொன்னதை போல் செய்து விடும் என்றும் பீதி அடைந்து வருகின்றனர் பயனாளர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here