தமிழகத்தில் 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் – வானிலை மையம் தகவல்!!

0

தமிழகத்தில் வரும் அடுத்த ஐந்து நாட்களுக்கு வறண்ட வானிலை காணப்படும் என சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வறண்ட வானிலை காணப்படும்.

வானிலை அறிக்கை

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று முதல் அடுத்து வரும் ஐந்து நாட்களுக்கு வறண்ட வானிலை காணப்படும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு முற்பகல் வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

‘எச் 1 பி விசாவில் குறைந்தபட்ச ஊதிய நிர்ணயத்திற்கு தடை – ஜோ பைடன் அதிரடி!!

தொடர்ந்து பிற்பகல் நேரங்களில் வானம் சற்று தெளிவாக காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையின் அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் ஆகவும் காணப்படும். தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மழையளவு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. மீனவர்களுக்காக எச்சரிப்பு எதுவும் கொடுக்கப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here