எல்லாரும் நாசமா தான் போவீங்க..,பிரச்சார கூட்டத்தில் சாபம் விட்ட சீமான் – மிரண்டு போன தொண்டர்கள்!!

0

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தனது பிரச்சாரத்தை தொடங்கி இருக்கும் சீமான் அதிமுக மற்றும் திமுக கட்சிகளை சரமாரியாக விளாசி உள்ளார். இதனால் தொண்டர்கள் மற்றும் மற்ற கட்சியினர் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல்

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற இருக்கின்றது. தேர்தலுக்கான அனைத்து பணிகளிலும் அனைவரும் இறங்கியுள்ளனர். முக்கிய கட்சிகள் தங்களது வேட்பாளர் பட்டியல், தேர்தல் அறிக்கை ஆகியவற்றை அறிவித்துள்ளது. அதே போல் சில கட்சிகள் தங்களது பிரச்சாரத்தையும் துவங்கி உள்ளது. தங்களது கட்சி வேட்பாளரை ஆதரித்து அனைத்து கட்சிகளும் வாக்கு சேகரித்து வருகின்றனர். இப்படியாக இருக்க, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

தமிழகத்தில் 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் – வானிலை மையம் தகவல்!!
Showing solidarity with Sikhs, Seeman calls for unity of all facing genocideஇவர் பேசும் அனைத்து கூட்டங்களிலும் அதிமுக மற்றும் திமுக கட்சிகளை விளாசி வருகின்றார். இதனை அடுத்து அனைத்து தரப்பு தொண்டர்கள் மற்றும் கட்சியினர் அதிர்த்தி அடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது, “நாங்கள் தமிழகத்தில் வெளிப்படையான ஆட்சியினை அமைக்க விரும்புகிறோம். ஊழல் குறைவாக இருக்கும் நாடு, டென்மார்க்”

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

“அதற்கு காரணம், வெளிப்படை தன்மை தான். அதே போல் தான் தமிழகத்திலும் ஆட்சியினை அமைக்க விரும்புகிறோம். ஒன்று மட்டும் தமிழக மக்களுக்கு சொல்லி கொள்ள விரும்புகிறேன். அது என்னவென்றால், மீண்டும் மக்கள் அதிமுக மற்றும் திமுக கட்சிகளுக்கு வாக்கு அளித்தால் நாசமாக தான் இந்த மாநிலம் போகும். நாங்கள் தமிழகத்தில் நல்ல ஆட்சியினை அமைக்க விரும்புகிறோம். கல்வி தரத்தினை அமைக்க விரும்புகிறோம். மருத்துவத்தினை இலவசமாக வழங்க இருக்கிறோம்” இவ்வாறாக பேசியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here