தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கனமழை வரை கொட்டி தீர்த்து வருகிறது. இந்நிலையில் தமிழகம், புதுச்சேரியில் நாளை முதல் செப்டம்பர் 21 ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக தமிழகம், புதுச்சேரியில் நாளை முதல் செப்டம்பர் 21 ஆம் தேதி வரை மிதமான மழை முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.