அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக்தில் உள் மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த 4 நாட்களுக்கான வானிலை நிலவரத்தையும் தெரிவித்துள்ளது.
வானிலை நிலவரம்:
தமிழகத்தில் உள் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு உள் மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும். மேலும் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் ஆகிய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையாக நிலவும். மேலும் அடுத்த இரண்டு நாட்களுக்கு காலை நேரங்களில் வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். 23.01.2021 முதல் 26.01.2021 வரை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையாக நிலவும்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
கமல்ஹாசன் இன்று டிஸ்சார்ஜ் – விரைவில் பணிக்கு திரும்புவார் என தகவல்!!
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். மேலும் காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்சமாக வெப்பநிலை 32 டிகிரி மற்றும் குறைந்தபட்சமாக 23 டிகிரி செல்ஸியஸை ஒட்டி இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சங்கராபுரம், கடவனுர் ஆகிய பகுதிகளில் தலா 2 சென்டிமீட்டர் மற்றும் மூங்கில் துறைப்பட்டு பகுதியில் 1 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. கடலுக்கு செல்ல மீனவர்களுக்கு எச்சரிக்கை எதுவும் விடுக்கவில்லை.