மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் இன்று மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார். காலில் ஏற்பட்ட காயத்தினிமித்தம் அறுவை சிகிச்சை செய்துள்ள அவர் இன்று வீடு திரும்பினார்.
கமல்ஹாசன் இன்று டிஸ்சார்ஜ்
கடந்த இரு தினங்களுக்கு முன்னாக காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன் இன்று வீடு திரும்புகிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தால் காலில் ஏதுவை சிகிச்சை செய்து கொண்டார். இதை தொடர்ந்து இரண்டாவது அறுவை சிகிச்சை இரண்டுநாட்களுக்கு முன்பு சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா தனியார் மருத்துவமனையில் நடைபெற்றது. சிகிச்சைக்கு பின்பு மருத்துவமனையில் ஓய்விலிருந்த அவர் இன்று வீடு திரும்பியிருக்கிறார்.
ஹாஸ்பிடலில் கண்ணம்மாவை பார்த்து விடும் வெண்பா – பரபரப்பான காட்சிகளுடன் “பாரதி கண்ணம்மா”!!
வருகின்ற சட்ட மன்ற தேர்தலில் போட்டியிடும் நடிகர் கமல்ஹாசன் தேர்தலுக்கான பணியில் ஈடுபட்டிருந்தார். அறுவை சிகிச்சைக்காக மருத்துவர்களின் அறிவுரையின் படி ஓய்விலிருக்கும் அவர் சீக்கிரமாக தனது அரசியல் பணிக்கு திரும்புவார் என அவர் தரப்பிலிருந்து தகவல்கள் வெளியானது. சிகிச்சைக்கு முன்னாக அவர் பேசியபோது ஓய்வு முடித்த பின் சீக்கிரத்தில் மக்களை சந்திப்பதாகவும் அதுவரை மாற்றத்திற்கான நம் உரையாடல் இணைய வழியாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.