அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலையாகவே நிலவும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் மீனவர்களுக்கு கடலுக்கு செல்ல எச்சரிக்கையையும் வானிலை மையம் விடுத்துள்ளது.
வானிலை நிலவரம்:
08.02.2021 முதல் 12.02.2021 வரை தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். மேலும் அடுத்த இரண்டு நாட்களுக்கு காலை நேரங்களில் வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் பனிமூட்டம் காணப்படும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் அதிகபட்சமாக 31 டிகிரி மற்றும் குறைந்தபட்சமாக 20 டிகிரி செல்ஸியஸாக நிகழும்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அதிவேகமாக பரவும் ‘தென்ஆப்பிரிக்க’ கொரோனா வைரஸ் – 40க்கும் மேற்பட்ட நாடுகள் பாதிப்பு!!
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
கடந்த 24 மணி நேரத்தில் மழை எந்த பகுதியிலும் பதிவாகவில்லை. மேலும் 08.02.2021 முதல் 09.02.2021 வரை மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் ஆகிய பகுதிகளில் வட கிழக்கு திசையிலிருந்து மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வரை பலத்த காற்று வீசக்கூடும். எனவே அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.