அடுத்த 4 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

0

அடுத்துவரும் 4 நாட்களுக்கு தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் வானிலை நிலவரம் பற்றியும் தகவல் தெரிவித்துள்ளது.

வானிலை நிலவரம்:

அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையாக நிலவும். மேலும் கிழக்கு திசை காற்றலைகள் காரணமாக அடுத்துவரும் 4 நாட்களுக்கு தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் லேசான மழை பெய்யும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதிகரிக்க தொடங்கும் தங்க விலை – பீதியில் மக்கள்!!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காட்சியளிக்கும். மேலும் காலை நேரங்களில் லேசான பனி மூட்டமும் காணப்படும். அதிகபட்சமாக 31 டிகிரியும் மற்றும் குறைந்த பட்சமாக 23 டிகிரி செல்ஸியஸை ஒட்டி இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் எந்த பகுதியிலும் மழை பதிவாகவில்லை. மேலும் கடலுக்கு செல்வத்தற்கு மீனவர்களுக்கு எச்சரிக்கை எதுவும் விடுக்கவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here