அதிகரிக்க தொடங்கும் தங்க விலை – பீதியில் மக்கள்!!

0

கடந்த சில நாட்களாக ஆபரணதங்கத்தின் விலை அதிரடியாக குறைந்து வந்தது. தற்போது இன்று ஆபரணதங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளது. இதனால் நகை வாங்கும் மக்கள் பீதி அடைந்து வருகின்றனர்.

தங்கம்:

கடந்த கொரோனா காலத்தில் தங்கத்தின் விலை யாரும் எதிர்பாராத வகையில் உச்சத்தை தொட்டது. இதனால் நகை வாங்க காத்திருந்த அனைவரும் அதிர்ந்து போனார்கள். மேலும் இந்த ஆண்டு தொடக்கத்தில் கூட தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து வந்தது. இதனால் சுபநிகழ்ச்சிகள் நடத்துபவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். அதன்பின்பு மக்களின் ஆசைக்கேற்ப கடந்த பண்டிகை காலம் முதல் ஆபரணதங்கத்தின் விலை அதிரடியாக குறைந்து வந்தது. இதனால் நகை வாங்குவதற்கு அனைவரும் ஆர்வம் காட்டினார். தற்போது இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளது. இதனால் நகை விரும்பிகள் பீதியடைந்துள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்தியாவில் டிக் டாக் சேவைகள் முழுமையாக நிறுத்தம் – 2000 பேர் பணிநீக்கம்!!

சென்னையில் இன்றைய நிலவரப்படி 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரித்துள்ளது. இந்நிலையில் 1 சவரன் ஆபரணத்தங்கம் தற்போது ரூ.36,976 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் 1 கிராம் ஆபரணத்தங்கம் தற்போது ரூ.4,622 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் சென்னையில் இன்றைய நிலவரப்படி 1 கிராம் வெள்ளி ரூ.70.80 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் 1 கிலோ கட்டி வெள்ளி தற்போது ரூ.70,800 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here