தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு!!

0

தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வறண்ட வானிலை நிலவும் எனவும் அடுத்த 2 நாட்களுக்கு தென்தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

வானிலை மையம் அறிவிப்பு

சென்னை வானிலை மையத்தின் பகல்நேர அறிக்கையின் படி அடுத்த 48 மணிநேரத்திற்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய இடங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த இரண்டு நாட்களுக்கு காலை நேரத்தில் லேசான பனி மூட்டம் நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டான்’ – மாஸாக வெளியான பர்ஸ்ட் லுக் வீடியோ!!

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தொடர்ந்து 29-01-2021 மற்றும் 30-01-2021 ஆகிய தினங்களில் தென் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் லேசான பனிமூட்டங்கள் காணப்படும் எனவும் அறிவித்துள்ளது. சென்னையின் அதிகபட்ச வெப்பநிலை 32% செல்ஸியஸ் ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலை 22% செல்சியஸ் ஆகவும் காணப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here