முதன்முறையாக தனது மகனின் புகைப்படத்தை வெளியிட்ட விஜய் டிவி பிரபலம் – இணையத்தில் வைரல்!!

0

விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் ம.கா.பா.ஆனந்த் முதல் முறையாக தனது மகனின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்துக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

விஜய் டிவியின் தொகுப்பாளர் மகாபா

விஜய் டிவியின் பிரபல நட்சத்திர தொகுப்பாளர் மகாபா ஆனந்த். ரேடியோ தொகுப்பாளாரான மகாபா, தன்னுடைய முயற்சியால் விஜய் டிவியில் வாய்ப்பு பெற்று, 2005ம் ஆண்டு முதல் தற்போது வரை நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். ஆரம்பத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கி வந்த ‘அது இது எது’ நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவியில் தனது பயணத்தை ஆரம்பித்தார் மகாபா. பின்பு நடிகர் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

தொடர்ந்து ‘கிங்ஸ் ஆஃப் டான்ஸ்’, ‘kpy சாம்பியன்ஸ்’, ‘mr அண்ட் ms சின்னத்திரை’ ஆகிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் இவரது ஸ்டைலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

‘பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும்’ – நிர்மலா சீதாராமன் கருத்து!!

குறிப்பாக இவரும் தொகுப்பாளினி பிரியங்காவும் சூப்பர் சிங்கர் செட்டில் நடத்தும் கோமாளித்தனம் பார்க்கும் அனைவரையும் ரசிக்க வைக்கும். நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களுக்கு மகாபா வைக்கும் புது புது பெயர்கள், பின்னாளில் அவர்களது சொந்த பெயரைவிட மகாபா வைத்த பெயர்களே நிலைத்து நிற்கும் அளவிற்கு அது பேமஸ் ஆகிவிடும்.

தொலைக்காட்சி மட்டுமல்லாது ‘வானவராயன் வல்லவராயன்’, ‘பஞ்சு மிட்டாய்’, ‘கடலை’ ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார் மகாபா. தற்போது சூப்பர் சிங்கர் மற்றும் முரட்டு சிங்கிள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் மகாபா தனது மகனின் புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது ஏகப்பட்ட லைக்ஸ்களை குவித்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here