இந்த வருடம் முழுவதும் தொடர்ந்து பல எதிர்பாராத இழப்புகளை சந்தித்து வருகிறோம். மேலும் தற்போது சித்ராவின் இறப்பு பலரையும் வெகுவாக பாதித்துள்ளது. இந்நிலையில் சித்ராவின் உடற்கூறாய்வு முடிந்து உடலை அவரது சகோதரரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சின்னத்திரை நடிகை சித்ரா
8 வருடமாக தனது கடினமான உழைப்பால் இந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமானவர் சித்ரா. இந்நிலையில் சமூகத்தில் இந்த அளவிற்கு பிரபலத்தை அடைந்து அடுத்த கட்டத்தை அடையும் வேளையில் அவரது இந்த மரணம் அனைவரையும் கதிகலங்க வைத்துள்ளது. இது தற்கொலை என்பது தான் அனைவரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மேலும் திட்டமிட்ட கொலை என்றும் பேசி வருகின்றனர். ஏனெனில் அவரது கன்னம் முழுக்க ரத்த காயங்கள் வேறு இருந்துள்ளது. தூக்கில் தொங்கும்போது எப்படி கன்னத்தில் காயம் ஏற்படும்?? என்றே அனைவரும் கூறி வருகின்றனர். மேலும் அவரது ரசிகர்கள் பலரும் அவருக்கு நடந்த அநியாயத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் குரல் கொடுத்து வருகின்றனர்.
மேலும் அவரது தயார் சித்ரா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தான் கூறியுள்ளார். மேலும் ஹேமந்த் பற்றிய தவறான தகவலும் வெளியாகி வருகிறது. அவர் நல்லவர் இல்லை என்பது போல பல கருத்துக்கள் சோசியல் மீடியாவில் பரவி வருகிறது.
இந்நிலையில் சித்ராவின் உடல் பிரேத பரிசோதனைக்கு நேற்று அனுப்பப்பட்டது. இந்நிலையில் உடற்கூறாய்வு ஆய்வு முடிவடைந்து. கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் உடற்கூறாய்வு நடைபெற்றுள்ளது. பிரேத பரிசோதனை செய்த சித்ராவின் உடலை அவரது சகோதரரான சரவணனிடம் ஒப்படைத்துள்ளனர்.