சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டதை அடுத்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று 4 வது நாளாக தனி அறையில் வைத்து ஹேமந்த்தை விசாரணை செய்து வருகின்றனர். மேலும் சித்ராவுடன் நடித்த சக நடிகர்களையும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சித்ரா
பாண்டியன் ஸ்டோர்ஸ் மூலம் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமானவர் சித்ரா. இவர் நடிப்பாலும், அவரின் சிரிப்பாலும் பலரையும் வெகுவாக ஈர்த்தார் என்றே சொல்லலாம். எப்பொழுதுமே சிரித்துக்கொண்டே இருக்கும் சித்ராவிற்கு அப்படி தற்கொலை செய்யும் அளவிற்கு என்ன தான் நடந்தது என்றே குழப்பமாக இருந்து வந்தது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இந்நிலையில் அவரது கணவரும், தாயாரும் கொடுத்த டார்ச்சரால் தான் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. சித்ராவின் மொபைலில் அனைத்தும் அழிக்கப்பட்டு வேறு உள்ளது. சைபர் கிரைம் போலீசார் அதனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சித்ராவிற்கு அரசியல் பிரமுகர் ஒருவர் தொந்தரவு அளித்ததாகவும் கூறப்படுகிறது.
நேற்று மூன்றாம் நாளாக நடத்தப்பட்ட விசாரணையில் சித்ரா பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முத்த காட்சியில் நடித்தது தனக்கு பிடிக்கவில்லை என்று ஹேமந்த் கூறியது பலரையும் ஷாக் ஆக செய்தது. இந்நிலையில் அவரது தாயாரும் கல்யாணத்திற்கு பிறகு கணவர் சொல்வதை தான் கேட்க வேண்டும் நடிக்காதே என்றும் கூறியுள்ளார்.
‘பாரதி கண்ணம்மா’ ஸ்பெஷல் எபிசோடாக 3 மணிநேர தொடர்!!
இந்நிலையில் இன்று நான்காவது நாளாக ஹேமந்த்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர் போலீசார். அவர் மட்டுமல்லாது சித்ரா நடித்த சீரியல் இயக்குனர் சிவசேகர் மற்றும் சக நடிகர்கள் ஸ்டாலின், சுஜிதா, ஹேமா, வெங்கட், குமரன், தங்கராஜ், விக்ரம் போன்றோருடன் விசாரணை நடக்கவுள்ளது.