ஒருநாள் உலக கோப்பை தொடரில் இந்திய அணியானது தனது முதல் போட்டியை ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நேற்று (அக்டோபர் 8) விளையாடியது. இந்த போட்டியில், 199 ரன்களுக்குள் ஆஸ்திரேலிய அணியை சுருட்டிய இந்திய அணி, 41.2 ஓவரிலேயே 200 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதில், கே எல் ராகுல் 97*, விராட் கோலி 85 ரன்கள் என அரைசதம் கடந்து அசத்தி இருந்தனர்.
Enewz Tamil WhatsApp Channel
இவர்களில், கே எல் ராகுல் ஆட்ட நாயகன் விருதை தட்டிச்சென்றார். இவரை தொடர்ந்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறந்த இந்திய பீல்டருக்கான பதக்கத்தை விராட் கோலி தட்டிச் சென்றார். இந்த பதக்கத்தை பெற்ற பிறகு, விராட் கோலி அதனை வாயில் கடித்து தனது மகிழ்ச்சியை கொண்டாடி உள்ளார். இதற்கான புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியை இழக்கும் இந்திய நட்சத்திரம்…, வெளியான நியூ அப்டேட்!!