சீயான் விக்ரம் தாத்தா ஆகிட்டார் – ரசிகர்கள் வாழ்த்து மழை!!

0

விக்ரமின் மகள் அக்ஷிதாவுக்கும், திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.முத்துவின் பேரன் மனு ரஞ்சித்துக்கும் கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி திருமணம் நடந்தது. கருணாநிதி தலைமையில் கோபாலபுரம் இல்லத்தில் திருமணம் நடைபெற்றது. நேற்று மதியம் 1 மணி அளவில் விக்ரம் மகளுக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில் நடிகர் விக்ரம் தாத்தா ஆகிவிட்டார்.

சந்தோஷத்தில் சீயான்:

விக்ரம் தமிழ் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர் மற்றும் பின்னணிப் பாடகர் என பன்முகம் கொண்டவர். இவர் தமிழ் முன்னணி நடிகர்களில் ஒருவர். இவர் தமிழ் திரைப்படத் துறையில் 7 பிலிம்பேர் விருதுகள் பெற்றுள்ளார். அது மட்டுமின்றி சிறந்த நடிகருக்கான ஒரு தேசிய விருதும் மற்றும் தமிழ்நாடு மாநில விருதும் பெற்றுள்ளார். இவருக்கு இரண்டு பிள்ளைகள், துருவ் விக்ரம் மற்றும் அக்ஷிதா விக்ரம்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தாத்தா ஆகியுள்ள விக்ரமுக்கு திரையுலகை சேர்ந்தவர்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தாத்தா ஆகிவிட்டார், ஆனால் பார்ப்பதற்கு இன்னும் இளமையாக இருக்கிறார் என்கிறார்கள் ரசிகர்கள். துருவ் விக்ரம் கடந்த ஆண்டு ஆதித்ய வர்மா என்னும் படத்தில் திரையுலகிற்கு வந்தார். அந்த படத்தின் மூலம் அனைவர் மனதையும் கொள்ளைகொண்டார்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக் தான் ஆதித்ய வர்மா. அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தன் அப்பா விக்ரமுடன் சேர்ந்து நடிக்கவிருக்கிறார் துருவ். அந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவிருக்கிறார். அப்பா மற்றும் மகன் நடிப்பதால் அந்த படத்திற்கு ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here