பாரதியுடன், கண்ணம்மாவை சேர்த்து வைக்க திட்டமிடும் சௌந்தர்யா – நிறைவேறுமா?? பரபரப்பான கதைக்களத்துடன் ‘பாரதி கண்ணம்மா’!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது எதிர்பாராத பல திருப்பங்கள் ஓடிக்கொண்டுள்ளது. மேலும் கோவிலில் வெண்பாவை பார்க்கும் கண்ணம்மா அவரை கண்டபடி பேசி கன்னத்தை சேர்த்து அறைகிறார். இது வரை வெண்பா செய்த கெடுதல் அனைத்தையும் சௌந்தர்யாவிடம் சொல்லிவிடுவேன் என்று மிரட்டுகிறார். இதே போல இன்றைய எபிஸோடிலும் பல திருப்பங்களை கொண்டுள்ளது.

பாரதி கண்ணம்மா

இது வரையிலும் சொந்த காலில் நிற்க வேண்டும் என்று போராடிய கண்ணம்மாவிற்கு நேற்றைய எபிசோடில் வேலை கிடைத்தது. மேலும் வெண்பாவிற்கு பிறந்த நாள் என்பதால் பாரதிக்கு கால் செய்து தன்னுடன் கோவிலுக்கு வர சொல்லி கூறுகிறார். பாரதியும் யோசித்து விட்டு வெண்பாவுடன் செல்கிறார். அங்கு சந்தோசமாக செல்லும் வெண்பா, பாரதிக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக கண்ணம்மாவும் குழந்தையுடன் அங்கு வருகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் கண்ணம்மா குழந்தையின் தந்தை பெயர் பாரதி என கூற பாரதி கோவமடைகிறார். இது தான் சாக்கு என்று வெண்பா பாரதியின் கையை பிடித்து நடக்கிறார். மேலும் கண்ணம்மாவை காண்டாக்க பாரதியை தொட்டு தொட்டு பேசினார். இதனால் கடுப்பான கண்ணம்மா வெண்பாவை கண்டபடி பேசி கன்னத்தை சேர்த்து அறைந்தார்.

மேலும் இன்றைய எபிசோடில் கண்ணம்மா அறைந்தால் கண்ணீரோடு நிற்கும் வெண்பா பாரதி வந்தவுடன் நடந்ததை வேறு விதமாக கூறி பாரதியை மேலும் வெறுப்பேற்றுகிறார். இதனால் பாரதி கண்ணம்மா மீது மேலும் கோவமடைகிறார். அதன் பிறகு கண்ணம்மா இன்றைய சம்பளத்தை துளசியிடம் தந்து இத்தனை நாள் செய்த உதவிக்கு நன்றி கூறுகிறார்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

மேலும் கண்ணம்மா வேலை செய்யும் இடத்தில் ஒரு பிறந்த நாள் விழாவிற்கு அழைக்க அங்கு செல்ல தயாராகிறார் கண்ணம்மா. மேலும் பாரதியின் நண்பன் மகனுக்கு பிறந்த நாள் தான் அந்த விழவே. பாரதியையும் கால் செய்து அழைக்க சௌந்தர்யாவும் பாரதியும் அங்கு வருகின்றனர். மேலும் இது சௌந்தர்யாவின் திட்டம் தான்.

சௌந்தர்யா பிளான் செய்து தான் கண்ணம்மாவையும் பாரதியை சந்திக்க வைக்க இவ்வாறு செய்தார். மேலும் சௌந்தர்யா இந்த பிறந்த நாள் விழாவில் பாரதியையும், கண்ணம்மாவையும் சேர்த்து வைக்க போவதாகவும் கூறுகிறார். அங்கு கண்ணம்மாவை பார்த்து சௌந்தர்யா கண்கலங்குகிறார்.

மேலும் கண்ணம்மாவும், சௌந்தர்யாவை பார்த்து விடுகிறார். இதோடு எபிசோடு முடிவடைகிறது. சௌந்தர்யா சொன்னது போல இந்த பிறந்த நாள் விழாவில் பாரதியையும், கண்ணம்மாவையும் சேர்த்து வைப்பாரா?? சௌந்தர்யாவை பார்த்த கண்ணம்மா என்ன செய்ய போகிறார்?? என்பதை வரும் எபிசோடுகளில் பொறுத்திருந்து பார்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here