மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார் நண்பரும், நடிகர் விஜய் சேதுபதி படத்தின் பாடலாசிரியருமான பிரபல பாடலாசிரியர் லலிதானந்த் மாரடைப்பால் இன்று உயிரிழந்தார்.
பாடலாசிரியர் மறைவு:
தமிழ் சினிமாவில் பிரபல பாடலாசிரியராக வலம் வந்தவர் பாடலாசிரியர் லலிதானந்த். துறையூர் அருகில் உள்ள நாகலாபுரத்தை சேர்ந்த இவருக்கு, மனைவி மற்றும் மகன், மகள் உள்ளனர். மறைந்த புகழ்பெற்ற பாடலாசிரியர் நா.முத்துக்குமார் நண்பரான இவர், விஜய் சேதுபதியின் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் வரும் ” என் வீட்டுல நான் இருந்தேனே” என்ற பாடலை எழுதி பலரால் பேசப்பட்டார்.
இவர் காஷ்மோரா, ஜூங்கா உள்ளிட்ட பல படங்களில் பாடல்களை எழுதியுள்ளார். கடந்த சில தினங்களாக, சிறுநீரக பிரச்சனை காரணமாக அடையாறில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்த இவருக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன் உடல்நிலை மிகவும் மோசமானது. இந்த நிலையில், இன்று காலை மாரடைப்பு காரணமாக தன்னுடைய 47வது வயதில் காலமானார். அவரது மறைவுக்கு ரசிகர்கள் கண்ணீர் செலுத்தி வருகின்றனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்