டீ குடிக்கும் போது முதியவருக்கு நேர்ந்த சோகம்.. அறுவை சிகிச்சை வரை சென்ற விபரீதம்!!

0

55 வயது முதியவர் ஒருவர் டீ குடிக்கும் போது அறியாத விதமாக டம்ளரையும் சேர்த்து விழுங்கிவிட்டதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சைக்கு பிறகு அந்த டம்ளரை வயிற்றில் இருந்து நீக்கியுள்ளனர்.

டம்ளரை விழுங்கிய முதியவர்:

பீகார் மாநிலம் முசாஃபர் நகரை சேர்ந்த 55 வயது மதிக்க தக்க முதியவர் ஒருவர் கடுமையான வயிற்றுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஸ்கேன் எடுத்து பார்த்த மருத்துவர்கள் வயிற்றுக்குள் மிக பெரிய கட்டி போல் ஏதோ ஒன்று இருப்பதை கண்டுபிடித்தனர். பின்பு அறுவை சிகிச்சை மூலமாகவே அந்த பொருளை அகற்ற வேண்டும் என அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர்.

அறுவை சிகிச்சை செய்யும் போது மருத்துவர்களுக்கு தூக்கி வாரி போட்டது. அதாவது அப்போது தான் முதியவர் வயிற்றில் இருந்தது கட்டி அல்ல, டீ குடிக்கும் டம்ளர் என்பது தெரியவந்துள்ளது. தொண்டை உணவு குழாய் பகுதிக்குள் அவ்வளவு பெரிய டம்ளர் எப்படி செல்லும் என மருத்துவர்களுக்கு சந்தேகம் எழ, இது குறித்து முதிவரின் உறவினர்களிடம் கேட்டுள்ளனர்.

பிரபல விஜய் சேதுபதி பட பாடலாசிரியர் திடீர் மறைவு – மாரடைப்பால் உயிரிழந்த சோகம்!!

டீ குடிக்கும் போது தெரியாமல் டம்ளரையும் சேர்த்து விழுங்கி விட்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் அதற்கான சாத்தியக்கூறு சுத்தமாக இல்லாத பட்சத்தில் இந்த டம்ளரை முதிவரின் ஆசன வாய் வழியே மட்டுமே உள்ளே அனுப்பியிருக்க முடியும் என மருத்துவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தற்போது இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு நெட்டிசன்களை அதிர்ச்சியாக்கியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here