கேப்டன் எப்படி இருக்கிறார்? இரண்டு நாளில் செய்தி வரும்? விஜயகாந்த் மனைவி பிரேமலதா தகவல்!!

0
கேப்டன் எப்படி இருக்கிறார்? இரண்டு நாளில் செய்தி வரும்? விஜயகாந்த் மனைவி பிரேமலதா தகவல்!!
தென்னிந்திய தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் அதிரடி நாயகனாக இருந்து வந்தவர் நடிகர் விஜயகாந்த். இவர் நடிப்பில் வெளிவந்த பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து சினிமா ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் அரசியலில் இறங்கி ஒரு கை பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதை அறிந்த ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் அவர் சீக்கிரம் குணம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.
மேலும் அவரின் உடல் நலம் குறித்த சில பொய்யான வதந்திகளும் சோசியல் மீடியாவில் தலைதூக்கி வருகிறது. இந்நிலையில் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, கேப்டன் தற்போது நலமாக உள்ளார். யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம். மேலும் இன்னும் இரண்டு நாட்களில் நல்ல செய்தி வரும் என்று அதை நானே சொல்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here