பாரதி கண்ணம்மா சீரியல் மற்றும் ராஜா ராணி சீரியல் தமிழ்நாட்டு அளவில் முதல் சீரியலாக அவதாரம் எடுத்துள்ளது.
விஜய் டிவி சீரியல்
விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி சீரியல் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. பாரதி கண்ணம்மா சீரியலில் டிஎன்ஏ டெஸ்ட் எப்பொழுது எடுக்க போகிறார்கள்? எப்பொழுது பாரதியும் கண்ணம்மாவும் ஒன்று சேருவார்கள் என்ற பல திருப்பங்களுடன் ஒளிபரப்புகி வருகிறது. கடந்த வருடத்தில் இருந்து இந்த விறுவிறுப்பான காட்சிகள் நடந்து வருகிறது.
இந்த பக்கம் பார்த்தால் அடுத்த இடத்தில் இருப்பது ராஜா ராணி. இந்த சீரியலில் சந்தியாவை மாட்டி விட அர்ச்சனா செய்யும் பல சதிகளில் இருந்து சரவணன் தொடர்ந்து காப்பாற்றி வர சிவகாமியிடம் நல்ல மருமகள் என்ற பெயரை வாங்குவாரா? என்ற கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த இரண்டு சீரியல்களையுமே பிரவீன் பென்னட் தான் இயக்குகிறார். இந்நிலையில் இந்த இரண்டு சீரியலும் தெலுங்கு சீரியலின் டப்பிங் தான். அப்படி இருந்தும் இந்த சீரியல் தமிழ் நாட்டின் அளவில் முதல் சீரியலாக இடம் பிடித்துள்ளது. இதனால் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.