தினசரி விலை மாற்றத்தை எதிர்கொண்டு வருகின்றன பெட்ரோல் மற்றும் டீசல். கடந்த சில நாட்களாக எண்ணாத உச்சத்தை அடைந்து மக்களுக்கு அதிர்ச்சி அளித்து வருகிறது. அந்த வகையில் இன்று சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நேற்றைய விலையில் மாற்றமின்றி அதே நிலையில் நீடிக்கிறது.
இந்த ஆண்டு கடந்த ஆண்டு போல இல்லாமல் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே பெட்ரோல் மற்றும் டீசல் விலை கிடுகிடுவென உயர்ந்து தான் வருகிறது. இருப்பினும் சற்று ஆறுதலாக இருந்தது அதன் விலை சதத்தை அடையாமல் இருந்ததே. ஆனால் இப்பொழுது அந்த ஆறுதல் கூட இல்லாமல் கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து சதத்தை கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை ஏற்றத்தை கண்டித்து மக்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் பல நூதன போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அதாவது, மக்களின் மிக முக்கிய தேவையாக உள்ள இந்த எரிபொருட்களின் விலையை எண்ணெய் நிறுவனங்களே சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்ப நிர்ணயிக்கின்றன. அந்த வகையில் தமிழக தலைநகர் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.37க்கும் மற்றும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.15க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது இது நேற்றைய விலையில் எந்த வித மாற்றமும் இன்றி அதே விலையில் தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்