‘கடமை செய் பலனை எதிர்பாராதே’…!போட்டோ போட்டு தத்துவம் சொன்ன பிக் பாஸ் பாலாஜி!!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களுக்கு தெரிய வந்தவர் பாலாஜி. பாலாஜி அவர்கள் அவ்வப்போது தனது புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தான் ஜிம்மில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு அதற்கு ஒரு கேப்ஷன் வைத்து உள்ளார். இந்த புகைப்படம்  தற்போது வைரல் ஆகிவருகிறது.

தன்னுடைய வாழ்க்கை பயணத்தை ஒரு மாடலாக தொடங்கியவர் பிக் பாஸ் புகழ் பாலாஜி. பிக் பாஸ் என்றாலே சர்ச்சை மற்றும் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இருப்பினும் மற்ற சீசன்களை விட சீசன் 4ல் இது கொஞ்சம் அதிகம் தான். இதற்கு மிக முக்கிய காரணம் பாலாஜி தான். இந்த நிகழ்ச்சியில் அவர் தனக்கென ஒரு விதி, தனக்கென ஒரு கூட்டம் என சுற்றி திரிந்தார். இருப்பினும் நேர்மையாக தன் மனதில் பட்டதை அப்படியே வெளிப்படையாக தெரிவித்தும் விடுவார்.

இதனாலேயே அவர் பல சர்ச்சை மற்றும் மிகுந்த வேதனைக்கு ஆளானார். மேலும் இவர் அங்கு ஒரு காதல் மன்னனாக வலம் வந்தார். மேலும் அங்கு நடந்த  ஒரு சுற்றில் பாலாஜி, தன்னுடைய  சிறுவயது  துன்பங்கள் மற்றும் அனுபவங்களை கூறி இருந்தார். அதுவரை வில்லனாக பார்க்கப்பட பாலாஜி அதன் பிறகு அவர் மீது ஒரு தனி பாசம், அக்கறை அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு வர தொடங்கியது. மேலும் அங்கு திறமையாக விளையாடி கடைசி நாள் வரை நிலைத்து நின்றார்.

இந்நிலையில் அவரின் பல புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்போது தான் ஜிமில் இருக்கும்படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அதோடு சேர்த்து, ‘கடமை செய் பலனை எதிர்பாராதே’ என்ற கேப்சனை பதிவிட்டு உள்ளார். இந்த போட்டோ மற்றும் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here