கதிர்-முல்லையை வீட்டுக்கு அழைத்து போகும் மூர்த்தி, ஜீவா..பாண்டியன் ஸ்டோர்ஸ்-ன் நெகிழ்வான தருணம்!!

0
கதிர்-முல்லையை வீட்டுக்கு அழைத்து போகும் மூர்த்தி, ஜீவா..பாண்டியன் ஸ்டோர்ஸ்-ன் நெகிழ்வான தருணம்!!
கதிர்-முல்லையை வீட்டுக்கு அழைத்து போகும் மூர்த்தி, ஜீவா..பாண்டியன் ஸ்டோர்ஸ்-ன் நெகிழ்வான தருணம்!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், ஆபத்தில் இருந்த கதிரை மூர்த்தி, ஜீவா காப்பற்றி வீட்டுக்கு அழைத்து வந்து உள்ளனர். இதையடுத்து என்ன நடக்கிறது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய எபிசோடில், மூர்த்தி வீட்டுக்கு வா கதிரு, நான் வீட்டை விட்டு கிளம்பும்போது உங்க அண்ணி உன்னையும், முல்லையையும் பத்திரமா வீட்டுக்கு கூட்டிட்டு வர சொன்ன, இப்போ நீங்க இல்லாம நான் மட்டும் எப்படி போறது, வந்துருங்க வீட்டுக்கு என கதிரிடம் அழுது கொண்டே பேசுகிறார். இதற்கு கதிர், நீங்க என்ன வீட்டுக்கு கூப்பிட மாட்டிகளானுதான் இவ்வளவு நேரம் ஏங்கிட்ட இருந்தேன், நான் வந்துறேன் அண்ணா என சொல்கிறார்.

கார்த்திக் ராஜ் நடிக்கும் சீரியல்ல நட்சத்திர பட்டாளமே நடிக்குதாம்.,இதுல அந்த விவாகரத்து பிரபலமும் ஒன்னு?

இதை பார்த்து ஜீவாவும், முல்லையும் சந்தோச படுகின்றனர். இந்த சமயத்தில், அது எப்படி பிரிந்த உறவு பிரிந்ததுதான் அதெல்லாம் சேராது என முல்லை அம்மா சத்தம் போடுகிறார். அதற்கு நா பாத்துக்குறேன் நீங்க பேசாம இருங்க என முல்லை சொல்லிவிடுகிறார்,. இதையடுத்து கதிர்,மூர்த்தி, ஜீவா, முல்லை ஆகியோர் வீட்டுக்கு செல்ல, தனம் கதிரை பார்த்து கண்ணீர் மல்க அழுகிறார். பின் ஆரத்தி எடுத்து கதிரையும், முல்லையும் வரவேற்கிறார். இதையடுத்து குடும்பத்தினர் அனைவரும் மூர்த்தி அம்மா போட்டோ முன் நின்று சாமி கும்பிடுகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அப்போது தனம், அத்தை கதிர் வந்துட்டான் என்று சொல்ல, அண்ணி இனி நா எங்கயும் போகமாட்டேன் என்று கதிர் சொல்கிறார். மேலும் தனம், ஒரு நிமிசத்துல எங்க எல்லாரையும் விட்டுட்டு போயிட்டில என்று சொல்லி வருத்தப்படுகிறார்.இதையடுத்து அந்த போட்டியில் நடந்த பிரச்சனை குறித்து கேட்க, முல்லை விளக்கமாக கூறுகிறார். இதையடுத்து ஐஸ்வர்யா போட்டியில ஜெயிச்சேன்னு சொன்னிங்க சோப்பு டப்பால கொடுக்கலையா என கிண்டல் செய்கிறார். அதற்கு முல்லை, மூர்த்தியிடம் அந்த போட்டி பத்தி இவளுக்கு சொல்லுக மாமா என்று சொல்ல, அதற்கு மூர்த்தி அது பெரிய அளவிலான போட்டி என்று கூறுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here