T20 IND vs ENG: சூர்யகுமாரை வீழ்த்த திட்டம் போட்ட இங்கிலாந்து கேப்டன்…, லீக்கான மாஸ்டர் பிளான்?

0
T20 IND vs ENG: சூர்யகுமாரை வீழ்த்த திட்டம் போட்ட இங்கிலாந்து கேப்டன்..., லீக்கான மாஸ்டர் பிளான்?
T20 IND vs ENG: சூர்யகுமாரை வீழ்த்த திட்டம் போட்ட இங்கிலாந்து கேப்டன்..., லீக்கான மாஸ்டர் பிளான்?

டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில், இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுவதற்கு தடையாக இருப்போம் என்று இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் கூறியுள்ளார். மேலும், சூர்யகுமாரை வீழ்த்த திட்டம் வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

டி20 உலக கோப்பை:

டி20 உலக கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் இந்திய அணி நாளை, இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என பெரிதும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. இறுதி போட்டியில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத வேண்டும் என்று ரசிகர்கள் மட்டும் இல்லாமல், ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் வாட்சனும் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளதாக முன்பு கூறியிருந்தார்.

புரோ கபடி லீக்: நம்பர் 1 அணியை எதிர்கொள்ளும் தமிழ் தலைவாஸ்…, வெற்றி பெற போவது யார்??

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர், இந்திய அணியை இறுதிப் போட்டிக்கு முன்னேற விடாமல் தடுப்பதற்கு, எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என்று கூறியுள்ளார். மேலும், இந்திய அணி வீரர்கள் குறித்து வெகுவாக பாராட்டி கூறியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதில், குறிப்பாக, சூர்யகுமார் குறித்து பேசிய ஜோஸ் பட்லர், இவர் மைதானத்தில் களமிங்கியினால் 360 கோணத்தையும் தன்னுடையதாக்கிக் கொள்கிறார். ஆனாலும், எந்த ஒரு சிறந்த பேட்ஸ்மேனும் தனது விக்கெட்டை பறிகொடுக்க ஒரு சிறு வாய்ப்பு பவுலருக்கு தருவார். அந்த வாய்ப்பை பயன்படுத்தி இவரது விக்கெட்டை எடுக்க முயற்சிப்போம் என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here