விஜய் டிவியில் மதிய நேர ஒளிபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் ‘காற்றின் மொழி’ தொடரில் வில்லியாக நடித்து வரும் தீபிகாவின் அம்மா கதாபாத்திரத்தில் புதிய மாற்றம் நிகழ்ந்துள்ளது.
காற்றின் மொழி தொடர்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் தொடர் ‘காற்றின் மொழி’. இந்தத் தொடரில் ‘ராஜா ராணி’ தொடரின் புகழ் சஞ்சீவ் நாயகனாக நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக வாய் பேசமுடியாத ஊமை கதாபாத்திரத்தில் நடிகை பிரியங்கா நடித்து வருகிறார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
கன்னட சீரியல் நடிகையான பிரியங்கா ‘காற்றின் மொழி’ தொடரில் தான் ஏற்று நடித்து வரும் ஊமை கதாப்பாத்திரத்தில் மக்களின் அன்பையும் அனுதாபத்தையும் அள்ளி வருகிறார். தற்போது தான் ‘காற்றின் மொழி’ தொடர் புது வேகம் பிடித்துள்ளது.
தொடரின் நாயகன் சந்தோஷ், நாயகி கண்மணியிடம் தன் காதலை சொல்ல கண்மணியும் பல்வேறு குழப்பங்களுக்குப் பிறகு சந்தோஷ் மீதான தன்னுடைய காதலை வெளிப்படுத்தியுள்ளார். ‘காற்றின் மொழி சீரியலில் சமீபகாலமாக சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கதையில் நாயகனாக நடிக்கும் சந்தோஷின் அம்மா கதாப்பாத்திரம் அண்மையில் மாற்றப்பட்டது.
சரோஜா தேவி, சிவகார்த்திக்கேயன் உட்பட 7 பிரபலங்களுக்கு கலைமாமணி விருது – தமிழக அரசு அறிவிப்பு!!
இந்நிலையில் இந்த தொடரில் வில்லியாக நடிக்கும் தீபிகாவின் அம்மா கதாபாத்திரத்தில் மாற்றம் நிகழ்ந்துள்ளது. இதுவரை அகிலா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த அகிலா என்பவர் மாற்றப்பட்டு புதிதாக தாரணி என்பவர் நடித்துவருகிறார். காற்றின் மொழி சீரியல் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, மராத்தி ஆகிய மொழிகளில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.