விஜய் தொலைக்காட்சியில் ஏகப்பட்ட ட்விஸ்டுகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது ஈரமான ரோஜாவே 2 சீரியல். இதில் காவியா மனம் மாறி பார்த்திபனுடன் சேர்ந்து வாழ நினைக்கும் நிலையில் இவர்களுக்கு கோர்ட் விவாகரத்து வழங்கியுள்ளது. மேலும் காவியா தன் மீது வைத்திருக்கும் காதலை காலம் கடந்து உணர்ந்த பார்த்திபன் என்ன செய்வது என்று புரியாமல் குழம்பி போய் இருக்கிறார். இப்படியான காட்சிகளுடன் டெலிகாஸ்ட்டாகி வரும் இந்த சீரியல் கூடிய விரைவில் முடிவுக்கு வரப்போவதாக ஒரு செய்தி இணையத்தில் பரவி வருகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதற்கு காரணம் இந்த சீரியல் டெலிகாஸ்டாகிவரும் அதே நேரத்தில் ஜீ தமிழின் சீதா ராமன் சீரியல் 5.3 என்ற டிஆர்பிங்கை பெற்று முன்னேற்றம் கண்டுள்ளது. இதனால் இனி ஈரமான ரோஜாவே 2 சீரியலின் எபிசோடுகள் இன்னும் விறுவிறுப்பாகி, ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். மேலும் ஒரு வேளை இந்த சீரியலின் டிஆர்பி இம்ப்ரூவ்மென்ட் இல்லாமல் குறையுமானால், இந்த சீரியலுக்கு end கார்டு போட வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் இந்த சீரியலில் இனி வரும் எபிசோட்களை அனல் பறக்கும் காட்சிகளாக மாற்ற ஒரு முக்கியமான நபர் ரீஎன்ட்ரி கொடுக்க உள்ளார். அதாவது பார்த்தி மற்றும் காவியா சேர தடையாக இருக்கு ரம்யாவை காதலித்து வந்த ஜெகேவின் காட்சிகள் கூடிய விரைவில் திரைக்கு வரவுள்ளது. இதன் மூலம் பார்த்திபன் ரம்யா இருவரின் திருமணம் நின்று காவிய பார்த்திபன் சேர வாய்ப்பு உள்ளது. இவ்வாறு இந்த சீரியலின் டிஆர்பி ரேட்டிங் அதிகரிக்க வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.