நீ அதை செய்யலைன்னா நான் செத்துருவேன்.,, காவியாவை மிரட்டும் பார்த்தி அம்மா.,, ஈரமான ரோஜாவே 2 சீரியல் இன்றைய எபிசோட்!!

0
நீ அதை செய்யலைன்னா நான் செத்துருவேன்.,, காவியாவை மிரட்டும் பார்த்தி அம்மா.,, ஈரமான ரோஜாவே 2 சீரியல் இன்றைய எபிசோட்!!
நீ அதை செய்யலைன்னா நான் செத்துருவேன்.,, காவியாவை மிரட்டும் பார்த்தி அம்மா.,, ஈரமான ரோஜாவே 2 சீரியல் இன்றைய எபிசோட்!!

2k கிட்ஸ்களை கவரும் வண்ணம் பல காதல் காட்சிகளுடன் ஒளிபரப்பாகும் ஈரமான ரோஜாவே சீசன் 2 சீரியலில் இன்று என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம்.

ஈரமான ரோஜாவே:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீசன் 2 சீரியல் மக்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றுள்ளது. அதாவது ஜோடிகள் மாறி திருமணம் நடந்துள்ள நிலையில் அவர்கள் எப்படி அந்த வாழ்க்கையை ஏற்றுக் கொள்வார்கள் என்பது தான் இந்த சீரியலின் முழு கதை. இந்நிலையில் இன்றைய எபிசோடில் பார்த்திக்கு அவரது அம்மா காபி கொண்டு வந்து கொடுக்கும் போது, கண்ணால் ஏதோ சிக்னல் கொடுக்கிறார். அதுக்கு பார்த்தி அம்மா, என்னடா சொல்ற ஒன்னும் புரியல என்று கேட்க, ஜீவா அவனோட சட்டை நல்லா இருக்கானு கேக்குராம்மா என்று சொல்கிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதற்கு அம்மா சட்டை சூப்பரா இருக்கு, அப்போது பார்த்தி, காவியா தான் வாங்கி கொடுத்தா ஒன்னு இல்ல மூணு வாங்கி கொடுத்துருக்கா என்று சொல்ல, அம்மா ஷாக் ஆகி, ஏன் இப்படி பண்றா, நம்ம தான் அவள பார்த்திய விட்டு விலகி இருக்க சொன்னோமே என்று மனதில் நினைத்து பார்க்கிறார். மறுபுறம் காவியா போட்டோவில் ரம்யா தான் பெயிண்ட் ஊத்தினாள் என்பதை குட்டி பாப்பா பார்த்தியிடம் சொல்லிவிட்டார். இதையடுத்து ரம்யாவை பார்த்தி, எனக்கு காவியாக்கு இடைல வராதனு அடிக்கடி உன்கிட்ட சொல்லி இருக்கேன்ல ஏன் இப்படி பண்ற என்று பயங்கரமாக திட்டுகிறார்.

பிக் பாஸ் வீட்டுக்குள்ள துளிர்ந்த காதல்.., இப்போ மரமா வளர்ந்து நிக்குது.., திருமணத்தை உறுதி செய்த ஜோடி??

மறுபுறம் காவியாவிற்கு போன் செய்த பார்த்தி அம்மா, நீ எதுக்கு என் பையனுக்கு சட்டை வாங்கி கொடுத்த, நீதான் அவனை விட்டு போக போறீல , அப்பறம் எதுக்கு அவன் மனசுல நம்பிக்கையை கொடுக்குற, நீ பார்த்திய விட்டு போகணும் இல்லைனா நான் செத்துருவேன் என்று மிரட்டுகிறார். இதை கேட்டு காவியா, நான் இல்லைனா பார்த்தி செத்துருவேன்னு சொல்லறாரு, இவுங்க நான் பார்த்தி கூட சேர்ந்தா செத்துருவேன்னு சொல்றாங்க நான் என்னதான் பண்றது என்று அழுக ஆரம்பித்து விட்டார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here