விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின், கடந்த சீசனில் கலந்து கொண்ட வருண், அக்ஷரா ஜோடி குறித்த முக்கிய தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பிக் பாஸில் காதல் :
விஜய் தொலைக்காட்சியின் முன்னணி என்டர்டைன்மென்ட் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இதன் 6வது சீசன் தற்போது, 30 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில், அந்த வகையில் பிக் பாஸின் 5வது சீசனில் போட்டியளர்களாக பங்கேற்றவர்கள் தான் வருண், அக்ஷரா. இவர்கள் இருவரும் இந்த நிகழ்ச்சிக்கு வந்த போதே, ஜோடியாகத்தான் என்ட்ரி கொடுத்தனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
என்னதான் வீட்டுக்குள் சக ஹவுஸ் மேட்டுகள் அடித்துக் கொண்டாலும் , இவர்களுக்குள் எப்போதும் சண்டை வந்ததே கிடையாது. இதனால், வீட்டுக்குள் இருந்தபோது இருவரும் காதலிப்பதாக பேசப்பட்டனர். ஜோடி கிளிகளாக பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்த இருவரும், டபுள் எவிக்ஷனில் இதிலிருந்து ஜோடியாகவே வெளியேறினர்.
இந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்பும் தற்போது வரை, இருவரும் அதே நட்புடன் தான் பழகி வருகின்றனர். அக்ஷராவின் அண்ணன் மிகவும் கண்டிப்பானவர். அக்ஷரா ஆண்களுடன் பேசுவதை அறவே வெறுக்கும் இவர், வருண் உடனான நட்பை மட்டும் இதுவரை கண்டிக்காதது ஏன்? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். காரணம் வருண் நல்ல பையன் என்பதால், இவர்கள் காதலுக்கு பச்சை கொடி காட்டி விட்டதாகவும், விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெற இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது. ஆனால், இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.