தளபதி நடிக்கும் வாரிசு படத்தில் இடம்பெற்ற ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடல் வரிகளுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
வாரிசு படம்:
தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் திரைப்படம் தான் வாரிசு. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் விவேக் வேல்முருகன் எழுதி விஜய் பாடிய “ரஞ்சிதமே ரஞ்சிதமே” பாடலை படக்குழுவினர் வெளியிட்டனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
தற்போது இணையத்தில் இந்த பாடல் ட்ரெண்டாகி வருகிறது. இந்நிலையில் ரஞ்சிதமே பாடலுக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதாவது இந்த பாடலில் “உச்சு கொட்டும் நேரத்திலே உச்சகட்டம் தொட்டவளே” என்று இரட்டை அர்த்தம் உள்ள வரிகள் இடம்பெற்றுள்ளது. தளபதி விஜய்க்கு குழந்தை ரசிகர்கள் அதிகம் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான்.
இளையராஜாவுக்கு கிடைக்கப்போகும் கௌரவம்., பிரதமரால் வரும் அங்கீகாரம் – குவியும் வாழ்த்து!!
இப்படி இரட்டை அர்த்தம் உள்ள வரியை விஜய் பாடியது வருத்தம் அளிக்கிறது. அந்த வரிகள் குறித்து இணையத்தில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பொதுவாக விஜய் படம் வெளியாகும் போது தான் பிரச்சனை வரும், இப்போது பாடல் தான் வெளியே வந்திருக்கு அதுக்குள்ள பிரச்சனை ஸ்டார்ட் ஆயிடுச்சு என்று விஜய் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.