சைக்கிள் ரேஸின் போது மயங்கி விழுந்த சந்தியா.., அதிர்ந்து போன சிவகாமி.., ராஜா ராணி 2 இன்றைய எபிசோட்!!

0
சைக்கிள் ரேஸின் போது மயங்கி விழுந்த சந்தியா.., அதிர்ந்து போன சிவகாமி.., ராஜா ராணி 2 இன்றைய எபிசோட்!!
சைக்கிள் ரேஸின் போது மயங்கி விழுந்த சந்தியா.., அதிர்ந்து போன சிவகாமி.., ராஜா ராணி 2 இன்றைய எபிசோட்!!

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியல் இப்போது விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டிருக்கிறது. இன்றைய எபிசோடில் சந்தியா சைக்கிள் ரேஸில் அனைத்து கஷ்டங்களையும் கடந்து 5 வது இடத்தை பிடித்து மயங்கி விழுகிறார். பிறகு ஜோதி சந்தியாவை எழுப்புகிறார். ஆனால் அவர் கண் முழிக்காததால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார். மறுபுறம் அர்ச்சனா, செந்தில் தேர்தலை பற்றி சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அப்போது பார்த்து சரவணன் அங்கு வர அர்ச்சனா, செந்தில் இருவரும் தேர்தலில் நிற்பதற்கு அம்மா எப்படி ஒத்துக்கிட்டாங்க என பேசிக் கொண்டிருக்கின்றனர். ஆனா சரவணன் தேர்தலில் நிற்கும் விஷயம் செந்திலுக்கு தெரியவில்லை. அதே சமயம் செந்தில் தேர்தலில் நிற்கும் விஷயம் சரவணனுக்கு தெரியவில்லை. இப்படி விஷயம் தெரியாமலே இருவரும் தேர்தலில் வெற்றி பெற்றால் எல்லாருக்கும் நல்லது செய்யணும் என பொதுவாக பேசிக் கொண்டிருக்கின்றனர்.

நீ அதை செய்யலைன்னா நான் செத்துருவேன்.,, காவியாவை மிரட்டும் பார்த்தி அம்மா.,, ஈரமான ரோஜாவே 2 சீரியல் இன்றைய எபிசோட்!!

அதன் பிறகு அர்ச்சனா, செந்தில் இருவரும் புது கடை வாங்குவது பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். அந்த பக்கம் மயக்கத்தில் இருந்து விழிக்கும் சந்தியா தான் 5வது இடம் வந்ததை நினைத்து சந்தோசப்படுகிறார். ஆனாலும் அப்துல் உங்களால முதலிடம் பிடிக்க முடியாது என நக்கலாக பேசுகிறார். பிறகு சந்தியா சரவணனுக்கு கால் செய்கிறார். ஆனால் அந்த போனை சிவகாமி எடுத்து பயிற்சி எப்படி போகிறது என கேட்கிறார். சந்தியா நல்லா தான் போகுது, இன்னைக்கு நடந்த பயிற்சியில் கூட 5வது இடம் வந்தேன் என சொல்லுகிறார்.

இதற்கு சிவகாமி நீ முதலிடம் பிடிக்கணும் அத மனசுல வச்சுக்கோ என சொல்லுகிறார். பிறகு போனை வைத்த சிவகாசி அவளுக்கு முன்னாடி நான்கு பேர் இருக்காங்க என வருத்தப்பட குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் ஆறுதல் கூறுகின்றனர். அடுத்ததாக சந்தியா, சரவணன் இருவரும் நீண்ட நேரம் போனில் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது சரவணன் சந்தியாவுக்கு ஒரு விடுகதை கேட்கிறார். இதற்கு பதில் தெரியாமல் சந்தியா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைந்து விட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here