பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரித்திகாவிற்கு வரும் வாரத்தில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாக்கியலட்சுமி சீரியல்:
விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீசன் 1 சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமான ரித்திகா தற்போது டாப் சீரியலில் ஒன்றான பாக்கியலட்சுமி தொடரில் அமிர்தா கேரக்டரில் நடித்து வருகிறார். பாக்கியலட்சுமி சீரியலில் இப்போது எழில்-அமிர்தா கல்யாணம் நடக்குமா? நடக்காதா? என்ற கேள்வி அனைவரது மனதிலும் இருப்பதால் கதை சூடுபிடித்துள்ளது.
எனக்கு End-ஏ இல்லைடா.,பாரதி கண்ணம்மா சீரியல் புதிய சாதனை – மிரண்டு போன சேனல் நிர்வாகம்!!
இந்நிலையில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக ரித்திகா தனக்கு விரைவில் திருமணம் நடைபெற போவதாக இணையத்தில் அறிவித்துள்ளார். அவர், விஜய் டிவியில் முக்கிய பதவியில் பணியாற்றி வரும் “வினு” என்பவரை தான் திருமணம் செய்ய போவதாக தெரிவித்துள்ளார். அவர்களுடைய திருமண பத்திரிகை இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் வினு-ரித்திகா திருமண வரவேற்பு வரும் நவம்பர் 27ம் மாலை நடைபெற உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
மேலும் ரித்திகாவும் விஜய் டிவி சீரியலில் தான் நடித்து வருகிறார், வினுவும் அங்கு தான் வேலை பார்த்து வருவதால் இது காதல் திருமணமாக தான் இருக்கும் என ரசிகர்கள் சொல்லி வருகின்றனர். பாக்கியலட்சுமி சீரியல் விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கும் இந்த சமயத்தில் ரித்திகா திருமணம் செய்து கொள்ள போகிறார். இதையடுத்து இவர் சீரியலில் நடிப்பாரா? இல்லை விலகி விடுவரா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.